சந்திரபாபு நாயுடு ஒரு ரத்தம் குடிக்கும் சந்திரமுகி

85பார்த்தது
சந்திரபாபு நாயுடு ஒரு ரத்தம் குடிக்கும் சந்திரமுகி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று காளஹஸ்தி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மாதம்தோறும் 1ஆம் தேதி தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வந்தனர். ஆனால், சந்திரபாபு செய்த புகாரின் காரணமாக வீடுகளுக்கு சென்று உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், முதியவர்கள் அலுவலகம் சென்று அதனை பெற்றுவந்தனர். இதில், வெயிலின் தாக்கம் காரணமாக இதுவரை 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் சந்திரபாபு நாயுடு தான். கொஞ்சம் விட்டால் சந்திரபாபு என்ற சந்திரமுகி உங்கள் ரத்தத்தை குடித்துவிடும்” என்றார்.

தொடர்புடைய செய்தி