காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

84பார்த்தது
பழனி நீதிமன்றம் வளாகம் அருகே மே தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. பின்னர் நீதிமன்ற வளாக முன்பு இருந்து ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை பழனி காவல்துணைக் கண்காணிப்பாளர் தன ஜெயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பழனி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. பின்னர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை மற்றும் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி