தனக்கு ஆட்சியமைக்க மெஜாரிட்டி கிடைக்காது என நினைத்து விட்டாரா மோடி?

66பார்த்தது
தனக்கு ஆட்சியமைக்க மெஜாரிட்டி கிடைக்காது என நினைத்து விட்டாரா மோடி?
இன்று நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், என்.டி.ஏ.வுக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் வலுவான என்.டி.ஏ ஆதரவை வலுப்படுத்துகின்றனர்‌ என தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பதிவில் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுவது, இதுவரை மோடி, பாஜக என தனித்துவமாக பேசி வந்த பிரதமர் மோடி என்.டி.ஏ என பேச ஆரம்பித்துள்ளது பாஜக தனித்து ஆட்சியமைக்க மெஜாரிட்டி கிடைக்காது என்பது தெரிந்து விட்டது போல என அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி