கும்பாபிஷேகத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்எல்ஏ

54பார்த்தது
கும்பாபிஷேகத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்எல்ஏ
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஏ. ஜெட்டி அள்ளி ஊராட்சி தேங்காமரத்துப்பட்டி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது இதனை அடுத்து தர்மபுரி பாமக மேற்கு மாவட்ட செயலாளரும் தர்மபுரி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக முதல் மரியாதை அளிக்கப்பட்டு ஊர் முக்கியஸ்தர்கள் வரவேற்றனர் இதனை அடுத்து சுவாமி தரிசனம் செய்த பின்னர் மக்களோடு மக்களாக அமர்ந்து அன்னதானம் அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி