ஏரியூர் அருகே அடிதடி தகராறில் காயமடைந்தவர் உயிரிழப்பு

562பார்த்தது
ஏரியூர் அருகே அடிதடி தகராறில் காயமடைந்தவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் நாகமரை ஊராட்சி காட்டூரை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் கூலித் தொழிலாளி மது போதையில் திவாகர் என்பவரது தோட்டத்தில் தனது தாய் வேலைக்கு சென்ற இடத்தில் அவரைப் பற்றி விசாரித்துள்ளார். அப்போது திவாகருக்கும் சந்திரசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அப்போது திவாகர் தனது நண்பர் சந்தோஷ் உடன் சேர்ந்து திவாகர் சந்திரசேகரை கட்டையால் தாக்கினார். இதனால் காயமடைந்த சந்திரகுமார் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததை அடுத்து ஏரியூர் காவல்துறையினர் அடிதடி வழக்கினை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி