பாலக்கோடு: தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்க கூட்டம்

75பார்த்தது
வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் பொழிந்து வரும் நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் இன்று காலை
காரிமங்கலம் வட்டாட்சியர் முன்னிலையில், செயல் விளக்க கூட்டம் தீயணைப்புத்துறை சார்பில் நடைபெற்றது. அப்போது
மழை காலங்களில் வீடுகளில் மழை நீரை வெளியேற்றுவது, கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பிகளை தொடாமல் இருப்பது, நீரில் மூழ்கியவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி செய்தல் மற்றும் வீடுகளில் தீப்பிடித்தால் செய்ய வேண்டியது, தீக்காயம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள், போன்றவற்றை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் செய்து காட்டி செயல் விளக்க அளித்தனர் இது சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் என கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி