கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்

63பார்த்தது
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்
தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம், கீழ்மொரப்பூர் ஊராட்சி பறையப்பட்டி அரசு உயர்நிலைப்பள் ளியில், கலைஞரின் வரு முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஒன் றிய திமுக செயலாளர் வேடம்மாள் தலைமை தாங்கினார். முகாமில் கண், பல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, சித்தா, பொது மருத் துவம், ஈசிஜி, ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, தொற்று நோய்களுக்கான சிகிச்சைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன், அழகரசன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மற்றும் ஒன்றிய அவைத்தலைவர் சாமி கண்ணு, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிட்டிபாபு, கிளை செய லாளர் ராமமூர்த்தி, முகி லன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாம் மூலம் 900 பேர் பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி