ஆடி மாதம் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோட்டை மாரியம்மனை தரிசித்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த அம்மனுக்கு உகந்த அருள் பிரசாதமான கூல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி, செவ்வாய், வெள்ளிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.