திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் உயிரிழப்பு

55பார்த்தது
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் உயிரிழப்பு
ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். நேற்று காலை 6 மணியளவில் கிரிவலம் வந்த 50 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் வேலூர் ரோடு அருகே சாலையோரம் உள்ள இடத்தில் அமர்ந்தார். தான் வைத்திருந்த தண்ணீரை அருந்திய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி