தொகுப்பு வீடுகளை இடித்து புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை!

66பார்த்தது
தொகுப்பு வீடுகளை இடித்து புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை!
நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி குடியிருப்பு வீடு இடிந்து 2 வயது குழந்தை பலியானது வேதனை அளிப்பதாக நாகை விசிக எம்எல்ஏ ஆளுர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஷா நவாஸ், நாகூர் அம்பேத்கர் நகரில் ஏற்கனவே வீடு இடிந்தது. ஆபத்தான நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி