மழையால் விபத்து ரயில் மீட்பு பணிகளில் தொய்வு

79பார்த்தது
திருவள்ளூர் கவரப்பேட்டையில் மழை காரணமாக ரயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. 12578 மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் நேற்று (அக்., 11) மாலை சரக்கு ரயில் மீது பின்புறம் மோதியது. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இதனை சீரமைக்க சுமார் 16 மணி நேரம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை, ஆந்திரா இடையே இன்று 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி