ஆன்லைன் விளையாட்டால் கடன் - வழக்கறிஞர் தற்கொலை.!

70பார்த்தது
ஆன்லைன் விளையாட்டால் கடன் - வழக்கறிஞர் தற்கொலை.!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் சென்னையில் மேலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது. சென்னை அமைந்த கதையை சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ், ஆன்லைனில் கேம் விளையாடியதில் ரூ.14 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் தனது மனைவிக்கு வீடியோ கால் செய்த சதீஷ், ‘நீ நலமாக வாழ்’ என கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். பண இழப்புகள் ஏற்படும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி