மணல் கடத்திய இரண்டு பேர் கைது

65பார்த்தது
மணல் கடத்திய இரண்டு பேர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெள்ளாற்றில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த காரையூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி மகன் வேலாயுதம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா அரச மரத்தெருவை சேர்ந்த தங்கப்பிள்ளை மகன் ஆசைத்தம்பி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆண்டிமடம் தாலுகா விழுதுடையான் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி