கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று திருத்தேர் வீதியுலா காட்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.