தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் விருத்தாசலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தூரில் உள்ள சர்க்கரை ஆலை சார்பில் தினந்தோறும் இலவச மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அவ்வழியச்செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என அனைவரும் மோரை அருந்தி புத்துணர்ச்சியோடு செல்கிறார்கள்.
மேலும் தரமான மோர் அவர்களுக்கு வழங்கப்படுவதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது போன்று மனிதாபிமானம் கொண்ட சிலர் செய்யும் செயல் பாராட்டுக்குரியதாகும்.