புலியூர் பள்ளியில் பாட புத்தகம் வழங்குதல்

70பார்த்தது
புலியூர் பள்ளியில் பாட புத்தகம் வழங்குதல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகம் மற்றும் நோட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.