வேலுடையான்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம்

68பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி