கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரின் நான்கு பிரதான சாலையில் மற்றும் பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் விதமாக தற்போதுள்ள இறைச்சி மார்க்கெட்டுக்கு உட்புறமாக உள்ள இடத்தினை சமன் செய்யும் பணியை நகர மன்ற தலைவர் சிவக்குமார் பார்வையிட்டார். உடன் நகர மன்ற துணை தலைவர் சுப்புராயலு மற்றும் வடலூர் நகராட்சி ஊழியர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.