மாருதி நகர் நாகத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

58பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் கோட்டைகரை மாருதி நகரில் உள்ள ஸ்ரீ சுயம்பு நாகத்தம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் இரண்டு கால யாகத்தில் பல்வேறு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி விமான கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கபட்டது தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி