குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்த சரண்ராஜ் மகன் அஸ்வந்த் நேற்று சகோதரர் ஹரிஸ் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் ஆகியோருடன் பெருமாள் ஏரிக்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மரத்தில் மீது இருசக்கர மோதியது. இதில் சிறுவர்கள் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.