அரசு பேருந்து மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

1553பார்த்தது
அரசு பேருந்து மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள தண்டக்காரன்குப்பத்தை சேர்ந்த மகாராஜன். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் இருசக்கர வாகனத்தில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மாமங்கலம் செங்கால் ஓடை அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அரசு விரைவு பேருந்து மோதியது.

இதில் படுகாயமடைந்த மகா ராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகாராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி