காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

53பார்த்தது
காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை ஒன்றிய அரசு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. மாநில உரிமைகளை பறிப்பதோடு மாத்திரமில்லாமல் ஒட்டுமொத்த மனித உரிமைகளை கேள்விக்குள்ளாக்குகிற வகையில் அமைந்துள்ள புதிய சட்டங்களின் ஆபத்தை சட்டமன்றத்தில் சுட்டிக் காட்டினோம்! புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென ஏக மனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். இந்நிலையில் இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழக அரசு, மாநில அளவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மேனாள் நீதிபதி தலைமையிலான ஒரு நபர் குழுவை அமைத்திருப்பது வரவேற்கத்தகுந்தது என காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி