உலக புகழ் பெற்ற கடலூா் மாவட்டம் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் மே 1 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. மேலும் மகாருத்ர யாகமும் நடைபெற உள்ளது.
இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் திருவிழா கோலம் பூண்டுள்ளது.