இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக இளைஞர்கள் அதிகமானோர் மாரடைப்பால் இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், நேற்று மக்களவையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "இந்த திடீர் மரணங்களுக்கான காரணத்தை உறுதிசெய்ய போதிய ஆதாரம் இல்லை கொரோனா தடுப்பூசி இதற்கு காரணமல்ல என்பது ICMR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.