ஜம்மு-காஷ்மீரில் நாளுக்கு நாள் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில், பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்துள்ள நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தொடர் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்ய இருக்கிறார். இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட உயர் அதிகாரிகளுடன் நாளை (ஜூன் 16) உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைத்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.