விசாகா குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

51பார்த்தது
விசாகா குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீலகிரி மாவட்ட காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் மீதான பாலியல் தொல்லை புகாரை மீண்டும் விசாரிக்க விசாகா குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு உரிய அவகாசம் வழங்கி 60 நாட்களில் புகார் தொடர்பான விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய விசாகா குழுவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

பணியிடங்களில் பாலியல் தொல்லையால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை என்றும் பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் பாலியல் தொல்லை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.