கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

63பார்த்தது
கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று (ஜூன் 15) மாலை 5 மணிக்கு நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றடைந்தார். கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு என திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி