மாஞ்சோலைக்கு செல்ல தொடரும் தடை

85பார்த்தது
மாஞ்சோலைக்கு செல்ல தொடரும் தடை
நெல்லை: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலையில், மாஞ்சோலை, காக்காச்சி, குதிரை வெட்டி, ஊத்து ஆகிய எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை நடத்தி வரும் பாம்பே பர்மா நிறுவனத்தின் குத்தகை வரும் 2028ஆம் ஆண்டு முடிவடைகிறது. இதனால் அங்குள்ள தொழிலாளா்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி