தேர்தல் பத்திரம் விபரங்களை நாளை மாலைக்குள் (மார்ச் 12) வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்று பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், நீதிபதிகளின் இந்த தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இத்தீர்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். பல்வேறு
அரசியல் கட்சி தலைவர்களும் தீர்ப்பை வரவேற்றுப் பேசி உள்ளனர்.