கம்யூ. அலுவலகம் தாக்குதல் - இபிஎஸ் கண்டனம்

78பார்த்தது
கம்யூ. அலுவலகம் தாக்குதல் - இபிஎஸ் கண்டனம்
திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை 13 பேர் கொண்ட கும்பல் சூறையாடியது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தேசிய கட்சி அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சியாகும். சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில் சாதிய தீண்டாமையால் தாக்குதல் நடந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி