டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோரிடம் கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கும் வகையில் QR கோடு முறையில் பில் வழங்கும் நடைமுறை 11 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த முறை ஜன.15-க்குள் மேலும் 10 மாவட்டங்களிலும், பிறகு மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக அமலானால், அனைத்து மதுபிரியர்களுக்கும் பில் கிடைக்கும், பணமும் மிச்சமாகும்.