காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் பலி

55பார்த்தது
காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் பலி
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டம், மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட புதுக்காடு எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் முகேஷ், (18). கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் இவர், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் புதுக்காடு எஸ்டேட்டில் இருந்து சோலையாறு அணை செல்லும் எஸ்டேட் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை துரத்தி சென்று தாக்கியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி