பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்

554பார்த்தது
பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்
கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சுற்றரிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே. பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி