பாலியல் புகார் - பேராசிரியர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்!

51பார்த்தது
பாலியல் புகார் - பேராசிரியர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்!
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கல்லூரியில் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக 7 மாணவிகள் புகார் கொடுத்தனர். இதனையடுத்து ஆணையத்தின் அதிகாரி கிருஷ்ணவேணி அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரியின் தற்காலிக உதவி பேராசிரியர்கள் சதீஷ்குமார், முரளி ராஜ், ராஜபாண்டி, ஆய்வக உதவியாளர் அன்பரசு ஆகிய 4 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி