

கோவை: சுல்தான்பேட்டை பகுதியில் கஞ்சா பறிமுதல்
கோவை மாவட்டம், சுல்தான் பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் வலசுபாளையம் அருகே நேற்று வாகன சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(25) மற்றும் வசந்த் (24) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.