கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு தலையில் காயத்துடன் வாலிபர் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார்.
இரு தரப்பு மோதலின் போது, அவர் தலையில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அங்கு பணியில் இருந்த பயிற்சி டாக்டர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் டாக்டரிடம் தகராறு செய்தார். உடனே காவலாளி வெள்ளலூரை சேர்ந்த ஜீவா (30) என்பவர் அங்கு வந்தார். அவர் வாலிபரை சமாதானம் செய்தார். அப்போது ஜீவாவையும் அந்த வாலிபர் மிரட்டி ரகளை செய்தார்.
இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சலீவன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.