ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் போலி காவலர் கைது!!

62பார்த்தது
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் போலி காவலர் கைது!!
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நேற்று திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், விஐபிக்கள் வரிசையில் முதல் நிலை காவலர் உடையணிந்த பெண் ஒருவர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணியில் இருந்த ஆனைமலை போலீசார் அந்தப் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலி காவலர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரீத்தா (34) என்பது தெரியவந்தது. மேலும், காவல் பணியின் மீதுள்ள ஆர்வத்தினால் காவல்துறை உடை அணிந்து பணிபுரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி