ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல்

50பார்த்தது
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இன்று(மே 13) மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி