சென்னை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு: பொதுமேலாளர் ஆய்வு

59பார்த்தது
சென்னை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு: பொதுமேலாளர் ஆய்வு
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர். என் சிங், சென்னை ரயில்வே கோட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் ஆகியவற்றில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள், ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நேற்று காலை 9. 35 மணிக்குஒரு பிரத்யேக ஆய்வு ரயிலில் புறப்பட்டார். இந்த ரயில் சென்றபோது, ரயில் தண்டவாளம் பராமரிப்பு, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்களை பொதுமேலாளர் ஆய்வு செய்தார்.

அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் மாம்பலம், கிண்டி, பரங்கிமலை ஆகிய நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதுதொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி