முதல்வர் மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்: குஷ்பு

52பார்த்தது
மனசாட்சி இருந்தால் மருத்துவ மாணவி கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிம அவர், கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் படுகொலை சம்பவத்தை பார்க்கும்போது தலைகுனிந்து கண்ணீர் விடுகிறேன். நம் நாட்டில் ஒரே பெண் முதல்வராக மம்தா பானர்ஜி தான் இருக்கிறார். ஆனால், அவர் முதல்வராக இருக்கும் மேற்குவங்க மாநிலத்தில்தான் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால், அவர் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக தூங்குகிறார். இந்த சம்பவத்துக்கு தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன்னை ஒரு பெண் என்று சொல்வதற்கும் முதல்வராக நீடிப்பதற்கும் தகுதி இல்லை. மனசாட்சி இருந்தால், மருத்துவ மாணவி கொலைக்கு பொறுப்பேற்று மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி