ஆளுநர் ஆர். என். ரவி தேநீர் விருந்து: முதல்வர் பங்கேற்பு

69பார்த்தது
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருடன் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால, இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், சுதந்திர தின விழா கொடியேற்றத்துக்குப் பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநருடைய கருத்தியல் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கிற அந்தப் பதவியின் மீதும், அந்தப் பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநருடைய அழைப்பினை ஏற்று தேநீர் விருந்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி