மத்திய அரசின் பாதுகாப்பு படை தேர்வு.. முக்கிய அறிவிப்பு

69பார்த்தது
மத்திய அரசின் பாதுகாப்பு படை தேர்வு.. முக்கிய அறிவிப்பு
மத்திய அரசின் ஆயுத காவல் படைக்கான காவலர் தேர்வு முதல் முறையாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தி உட்பட மொத்தம் 13 மொழிகளில் நாடு முழுவதும் காவலர் தேர்வு நடைபெறும் எனவும், நாடு முழுவதும் 128 நகரங்களில் பிப்ரவரி 20 முதல் மார்ச் 7 வரை நடைபெறும் தேர்வை 48 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.