"தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய அரசு"

74பார்த்தது
"தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய அரசு"
தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என தென்சென்னை எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழச்சி தங்க பாண்டியன், “இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு அளப்பரியது. பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இது போன்ற புறக்கணிப்புகள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவத்தின் ஆன்மாவையும் குலைக்கிறது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி