தமிழ்நாடு எல்லையை வந்தடைந்த காவிரி நீர்

64பார்த்தது
தமிழ்நாடு எல்லையை வந்தடைந்த காவிரி நீர்
கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது. இதையடுத்து, காலை முதல் 4500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடகவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் மொத்தம் 26,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி