சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்தாண்டு பக்தர்களுக்கு ஏலக்காய் சேர்க்கப்படாமல் அரவணை வழங்கப்பட்டது. இந்த நிலையில், “தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத ஏலக்காய் வழங்க வேண்டும் என்கிற விதிகளுடன், 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம்போர்டு டெண்டர் விடுத்துள்ளது.