பேருந்து நிலைய நடைமேடையில் ஏறிய பஸ்.. (வீடியோ)

1100பார்த்தது
தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் தற்காலிக பணியாளர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலையில் நாகர்கோவில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு ஒரு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அதனை தற்காலிக டிரைவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்து ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தை சுற்றி வந்தபோது ஒரு பேன்சி கடையின் நடைமேடையில் ஏறியது. இதனால் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களும், அலமாரியும் உடைந்து நாசமாயின. இந்த சம்பவம் நடந்த போது அங்கு பயணிகள் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி