BREAKING: பஸ் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்

84355பார்த்தது
BREAKING: பஸ் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஸ்ட்ரைக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க தலைமை நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி