BREAKING: வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்

78பார்த்தது
மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று (மே 14) தாக்கல் செய்துள்ளார். இதில் மத்திய அமைச்சர்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாரணாசி உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தின் சில தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜுன் 4ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி