ஜன்னலை உடைத்து நகைகள் கொள்ளை! கதறும் குடும்பம் (Video)

55பார்த்தது
சென்னையில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவுக்குள் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிபி சத்திரம் பகுதியில் உள்ள வீட்டில் வசிக்கும் பவானி என்பவர் நேற்று (மே 25) இரவு வீட்டை பூட்டிக் கொண்டு கடைக்கு சென்றார். திரும்பி வரும் போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. வீட்டு ஜன்னலை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே பீரோவுக்குள் இருந்த 35 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி