பிறந்தது ஆடி மாதம்.! களை கட்டிய அம்மன் கோவில்கள்.!

54பார்த்தது
பிறந்தது ஆடி மாதம்.! களை கட்டிய அம்மன் கோவில்கள்.!
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிச்சிறப்பு உண்டு. தமிழர்கள் வாழ்வியலில் ஆடி மாதத்திற்கு தனி இடம் உண்டு. ஆன்மீக ரீதியாகவும் இந்த மாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் காலை முதலே அம்மன் கோவில்கள் களை கட்டி வருகிறது. ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை போன்ற பல சிறப்பு வாய்ந்த நாட்கள் ஆடி மாதத்தில் வருவதால் ஆடியை தமிழ் மக்கள் முக்கிய மாதமாக பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி